புதுக்கோட்டை, 09-04-2015
புதுக்கோட்டையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ.ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா எதிரில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபாஸ்தியன், எம்.முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், எஸ்.சங்கர். எஸ்.பொன்னு சாமி, ஏ.ஸ்ரீதர், க.செல்வராஜ், எம்.உடையப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பு மணவளான், டி.சலோமி, எஸ்.பாலசுப்பிரமணியன், பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment