R TV

R TV
total pageviews

one and ONLY best MEDIA

one and ONLY best MEDIA

R TV PUDUKKOTTAI



புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்தது.


புதுக்கோட்டை, 13 - 04 - 2015

புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடி மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடி–மின்னலுடன் மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை நகர வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் கடுமையான கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

கோடை காலத்தில் பெய்துள்ள இந்த மழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குடி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி, வெண்டை பயிர்களுக்கு நேற்று பெய்த மழை பயன் உள்ளதாக இருந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். இதே போல் ஆலங்குடி, வடகாடு, மரமடக்கி, கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பூ வகைகளும் இந்த மழையால் அதிக மகசூல் தரும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

                   

No comments:

Post a Comment